விழிகளில் வழியும் வரிகள்…











எதிரெதிரே சந்தித்தபோது
நாணத்தால் நீ
தலை குனிந்தாலும்..
உன் விழிகளில் வழியும்
வரிகள்…
எனக்குள் (க)விதையாய் விழுகிறது..!
எனை நீ நேரில் பார்த்தால்
ஏனோ நான் புதையுண்டு போகிறேன்
சுகமான தருணம்
உன் மொழியில் மட்டுமல்ல
மெளனத்திலும் உணர்கிறேன்..!
விடியலில் காணாத வெளிச்சத்தை
உன் விழிகளில் காண்கிறேன்…!

-திருமலைசோமு

0 Comments: