Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

சந்திரயான்

|0 Comments

 நெடுங்காலமாய் ஊமையாய் இருந்த 

ஒரு உவமையின்

மெய் தீண்டியது...

சந்திரயான்


... 3

உனது விழிகளில்

|0 Comments
பொய்யுரைக்கும் என்பான் கவி
உன் மைதீட்டிய விழிகள்...
என்றாலும்

எத்தனை எத்தனையோ உணர்வுகள்!

|0 Comments

சொற்களால் நான் கவிதை கட்ட 
கற்களால் நீ உருவம் தந்தாயோ ! 
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின் 
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்  
உணர்வுகள்தான் 
எத்தனை எத்தனையோ!

அடடா இந்த பூமிப் பந்து!

|0 Comments
நாடு கடந்து
பயணிக்கும் போதுதான்
வியக்கிறேன்...!
அடடா இந்த பூமிப் பந்து
எத்தனைப் பெரியது!

பரந்து விரிந்து கிடக்கும்
இந்த உலகப் பாயை
இணையம் என்ற
ஒற்றை வலைக்குள் சுருட்டி
உள்ளங்கைக்குள் வைத்திருக்கும்
மனிதனின் அறிவு
இன்னும் பெரிதன வியக்கிறேன்!

(பின் குறிப்பு முதல் முறையாக சீனாவின் புல்லட் ரயில் பயணத்தின் போது!)

பட்டாசு பூமியும் மத்தாப்பு வானமும்

|0 Comments
சுத்தும் பூமியில்..
சுகங்கள் ஆயிரம் தேடி
படபடக்கும் மனதோடு.
நாளும் ஓடித் திரியும் மனிதனுக்கு
நாளாம் திருநாளாம்.

நள்ளிரவின் நிசப்தத்தில்

|0 Comments
நள்ளிரவின் நிசப்தத்தில்
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
உன் வெற்றி முகத்தின் வெளிச்சத்தில்
மலர்ந்து சிரிக்கின்றன மலர்கள்..
தோற்றது போலொரு தோற்றத்தில்..!
நான் அடைந்த வெற்றியை 
எப்படி பறைசாற்றுவது..!

கடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை

|0 Comments
பக்தகோடிகளே...
இனி கோயில்களில் சென்று
கடவுளர்களை தேடாதீர்கள்..

என் வரமும் நீ என் சாபமும் நீ

|0 Comments
என் வரமென்று வந்தவளே
நான் நுகராத வாசனைகள் தந்தவளே…
எத்தனை சந்தோஷம்
எத்தனை கொண்டாட்டம்
எனை சூழ்ந்தாலும்
அத்தனையையும்
உனக்கே சமர்ப்பிக்கிறேன்.
எத்தனை துயரம்
எத்தனை துன்பம்
எனை வீழ்த்தினாலும்
மீண்டும் என்னை
உயிர்ப்பித்துக் கொடுப்பது
கவிதையே
நீ என்ற
என் ஒற்றை வரமே
என் வரமென்று வந்தவளே
நான் நுகராத வாசனைகள் தந்தவளே…
நீயே எனக்கு
சாபமாக மாறினாலும்
நின்னைச் சிந்தித்தே..என்
சுயத்தை இழந்தாலும்..!
நினைவுகளால் சுகமளித்து
நீங்காத இன்பம் தந்து.
கவிதை மொழியில்..
மீண்டும் மீண்டும் வரமென்றே
வந்து சேர்கிறாய்..
கவிதையே….
என் வரமும் நீ
என் சாபமும் நீ
- கவிஞர். திருமலை சோமு

அடடா இரண்டு வானம்..!

|0 Comments
பாறை பாறையாய் முளைத்திருந்த 
மேகங்களை கிழித்து 
சிறகுவிரித்த...விமானத்தில் இருந்து
சற்றே தலை நிமிர்ந்தேன்...!
அடடா 
இரண்டு வானம்..!

கொலை செய்யப்படும் பூக்கள்

|0 Comments
இறுதி ஊர்வலத்தில் 
பிய்த்து எரியப்படும்
மாலைகள்
யார் நாசிக்கும் 
மணம் வீசுவதில்லை..
பாவம்..
யார் விட்ட சாபமோ
பிணத்தோடு சேர்ந்து
பயணம் போகிறது 
உதிரிப் பூக்களும்..

என் ஓட்டம்.. என் இலக்கு!

|0 Comments
என்னைப் புறந்தள்ளியவர்களுக்கு
மத்தியில்தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்
என் ஓட்டம்..
அவர்களை எட்டிப் பிடிப்பதற்கானதோ..
முந்திச் செல்வதற்கானதோ அல்ல..
என் இலக்கிற்கானது...

வான மழை நீ எனக்கு

|0 Comments
வேண்டும் போதும்..
வேண்டி கேட்ட போதும்..
இல்லையென்று சொல் உணராது..
தந்துதவும்.. உன்னை
வேறென்ன சொல்ல..!

கைமாறு கருதாமல்..
கை நீட்டி.. அரவணைக்கிறாய்..
மண்ணுலகில்..மானுடர்க்கு
மட்டுமல்லாமல்..
புல்..பூண்டுக்கும்
நீயே.. அன்னையாய்..
அன்பு பொழிகிறாய்..

வான மழையே நீ யெனக்கு
தவிமின்றி கிடைத்த
வரமின்றி வேறென்ன..!

தினமணி இணையத்தில்:
http://goo.gl/CnLrne





எதிர்கால கனவு

|0 Comments
எல்லோருக்குள்ளும் இருக்கும்
விதவிதமான எதிர்கால கனவு..
ஒரு விவசாயி மகனான
எனக்குள்..
விலை போகாமல் எங்கள்
விளைநிலம்..மகசூல் மட்டுமே
தந்து கொண்டிருக்க வேண்டும்
எல்லா காலத்திலும்..
ஊருக்கே உணவளித்து..
உறவுகள் பேண வேண்டும்..
பசுமை மாறா பூமி..
பாரினில் எங்கும் வேண்டும்..!

நா.முத்துகுமார் மறைவு: கவிதாஞ்சலி

|0 Comments
நினைத்து நினைத்துப் பார்த்தால் 
நெஞ்சம் கனக்குது..
ஆனந்த யாழ் ஒன்று
இன்று அமைதியாய் கிடக்குது..
வார்த்தை அருவி.. ஒன்று
வற்றிவிட்டது..
காற்றில் சுற்றி சுற்றி வந்து
காதுகளுக்கு இனிமை சேர்ந்துவந்த
கவிதை.. ஒன்று சுவாசமற்றுக்
கிடக்குது...
வீரநடையில் தன் பாட்டுப் பயணத்தை
தொடங்கிய
கவிதைத் தாயின் புதல்வன்
மீண்டும்.. தன் கர்ப்பகிரகம்
தேடிப் போனோனோ..!

வரம் என் வாக்குரிமை...!

|0 Comments
என் தேசத்தின்...
என் சாலை
என் மின்சாரம்
என் குடிநீர்
என் உணவு என்ற..
எல்லா அடிப்படை
தேவைகளிலும்
இடையூறுகள்..
நேற்றுவரை சீராக சென்ற
சாலையில் திடீர் பள்ளம்
பொறுத்துக் கொண்டேன்
நேற்றுவரை தடையின்றி வந்த
குடிநீர், மின்சாரத்திலும்..
குறைப்பாடு...
சகித்துக் கொண்டேன்...
உண்ணும் உணவுப் பொருட்களின்
விலையோ உச்சத்தில்
அமைதி காத்தேன்..
இதோ என் பொறுமைக்கும்
சகிப்புத்தன்மைக்கும் வரமாய்
ஒரு வாசல் திறக்கிறது....
குரல் ஏதும் எழுப்ப முடியாமல்
சாமானியனாய் இருக்கும் எனக்கு
விரல் அசைவில் எனக்கான
மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள
தேர்தல் எனும் தெய்வம்
தந்த வரம் என் வாக்குரிமை...!

மழை

|0 Comments
இப்போதெல்லாம்
எப்போதாவது பெய்யும் மழையில்
காளான்கள் கூட முளைப்பதில்லை

விளைச்சலுக்கு பயன் பெறாமல்
வீணே கொட்டித் தீர்க்கும்
மழையில்

ஏராளமாய் விளைந்து கிடக்கிறது
கவிதைகள் மட்டும்..

அருங்காட்சியகத்தில் வைத்து
அழகு பார்க்கும் பழைய பொருட்கள் போல்
மழை எங்களுக்கு ஏனோ
வெறும் பாடு பொருளானது

பாடுபட்டு உழைத்தும்
பயனில்லாமல் போனது
மழையின் பயணத் திட்டத்தில்

அடிக்கடி ஏற்படும் குளறுபடியினால்..!

அஹிம்சை

|0 Comments
அஹிம்சை
இந்தியாவின் தேசிய சொல்
ஆங்காங்கே சில
எதிர்ப்பதங்களும் உண்டு

இருப்பினும் - இது
எதிரிகளை ஆயுதம் இன்றி வீழ்த்தும்
வலிமை கொண்ட கூர்ச் சொல்

இந்த ஒற்றைச் சொல்லெடுத்து
காலனி ஆதிக்கத்தை
காலடியில் வீழ்த்தியவர்
அண்ணல் காந்தி..!

தேசப் பிதாவாய்
மகாத்மாவாய்
மானுடம் போற்றும்
ஓர் உயிராய் இன்றும் வாழும்
அன்னல் காந்தியின் கைத்தடியில்
காலூன்றி நின்ற அஹிம்சை

ஆங்கிலேய ஆதிக்கத்தை
காலிடறி விழச்செய்ததோடு
அகிலம் எங்கும்
ஆனந்த ஜோதியாய்

எழுந்து நிற்கிறது..!

காகிதங்கள்

|0 Comments
உன்னில் எழுதி எழுதி
கிழித்த எழுத்துக்கள்- என்னை 
கேள்விகள் கேட்கின்றன
தப்பு செய்தவன் நீ
தண்டனை காகிதங்களுக்கா

மதிப்பெண்கள் 
அதிகம் பெற்றுத்தந்த
தேர்வுத் தாள்கள் மட்டும்
எனக்குள் என்றென்றும்
மதிப்பு மிக்கதாய்..!

மறந்தும் கூட 
தொலைத்து விடாமல்
சான்றிதழ்களைப் போல் 
சேகரித்து வைத்திருக்கிறேன்
அவள் காதலைச் சுமந்து வந்த 
காகிதக் கடிதங்கள்

உயிர்பெற்று
உறவின் உருவமாய் தெரிவது
அன்பைச் சுமந்துவரும்
கடிதங்கள் மட்டுமல்ல

நிகழ்வுகளைச் சுமந்து
உலகின் வடிவமாய்
வந்து விழும்
செய்தித் தாள்களும்தான்

வடிவங்கள் மாறலாம்
இறைவனின் அவதாரம் போல்
எத்தனை உரு நீ கொண்டாலும்

நரனுக்கு சிம்மாசனம் தரும்
ரூபாய் நோட்டுக்களை 
நரசிம்ம அவதாரமாய் பார்க்கிறேன்

பணம் சேர்த்து பணம் சேர்த்து
மனிதனின் குணம் மாறிப் போகாமல்
இருக்கவே..
அகிம்சையின் முகம் காட்டிச்
சிரிக்கிறாய் போலும்..!

வெற்றுக் காகிதங்கள் என்று
வீணில் தூக்கி எறிய எதுவுமில்லை
சற்று உற்று நோக்கினால்
துண்டுச் சீட்டு துணுக்குகள் கூட
நறுக்கென்று நெஞ்சைத் தைக்கின்றன

என் வரமும் நீ என் சாபமும் நீ

|0 Comments

என் வரமும் நீ
என் சாபமும் நீ
என் வரமென்று வந்தவளே
நான் நுகராத வாசனைகள் தந்தவளே…
எத்தனை சந்தோஷம்
எத்தனை கொண்டாட்டம்
எனை சூழ்ந்தாலும்
அத்தனையையும்
உனக்கே சமர்ப்பிக்கிறேன்.
எத்தனை துயரம்
எத்தனை துன்பம்
எனை வீழ்த்தினாலும்
மீண்டும் என்னை
உயிர்ப்பித்துக் கொடுப்பது
கவிதையே
நீ என்ற
என் ஒற்றை வரமே
என் வரமென்று வந்தவளே
நான் நுகராத வாசனைகள் தந்தவளே…
நீயே எனக்கு
சாபமாக மாறினாலும்
நின்னைச் சிந்தித்தே..என்
சுயத்தை இழந்தாலும்..!
நினைவுகளால் சுகமளித்து
நீங்காத இன்பம் தந்து.
கவிதை மொழியில்..
மீண்டும் மீண்டும் வரமென்றே
வந்து சேர்கிறாய்..
கவிதையே….
என் வரமும் நீ
என் சாபமும் நீ