மழை

இப்போதெல்லாம்
எப்போதாவது பெய்யும் மழையில்
காளான்கள் கூட முளைப்பதில்லை

விளைச்சலுக்கு பயன் பெறாமல்
வீணே கொட்டித் தீர்க்கும்
மழையில்

ஏராளமாய் விளைந்து கிடக்கிறது
கவிதைகள் மட்டும்..

அருங்காட்சியகத்தில் வைத்து
அழகு பார்க்கும் பழைய பொருட்கள் போல்
மழை எங்களுக்கு ஏனோ
வெறும் பாடு பொருளானது

பாடுபட்டு உழைத்தும்
பயனில்லாமல் போனது
மழையின் பயணத் திட்டத்தில்

அடிக்கடி ஏற்படும் குளறுபடியினால்..!

0 Comments: