![]() |
செடியில்லை கொடியில்லை
செங்காத்து பூமியில் வேர் விட்டு
மொட்டு விடவும் இல்லை
ஆயினும் ஏனோ..
இமைக்கும் இடைவெளியிலும்
நொடிக்கொரு பொழுதுமென
பூத்து நிற்கிறதென் மனக்கனவுகள்
நிறைவேறும் என காத்திருந்த
நிமிடங்களில் கூட
நீரோட்ட்த்தில் புதையும்
காகித கப்பலாய்
காணாமல் போயிருக்கிறது..
கனப் பொழுதில் கரைந்தே போனாலும்
விடிகாலை வானில்
புன்னகைக்கும் புது சூரியனாய்...
மீண்டும் மீண்டும் எழுகிறது
என் மனக்கனவுகள்...
கதவுகள் அடைத்து துரத்தவோ...
கடிவாளம் போட்டு இழுக்கவோ
முடியாத என் மனக்கனவுகளுக்கு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
என் கனவுகளை
கொன்று தின்று கொக்கரித்தவர்களே..
நினைவில் கொள்ளுங்கள்..
காற்றும் கடவுளும் என்றும்
ஒரு திசையில் நின்றதில்லை..!
0 Comments:
Post a Comment