வேலையில்லா பிரச்னையில் இருந்து விடுபட.. சில யோசனைகள்!


உத்தியோகம் புருஷலட்சணம் என்று அந்த காலத்திலேயே சொல்லி வைத்தார்கள்ஏதேனும் ஒரு  வேலை செய்வதும்  பொருளீட்டுவதும்அதைக்கொண்டு தன்னை தன் குடும்பத்தை காப்பதும்தான்
  ஆண்மகனுக்கு அழகுஇன்று பலர் என்  படிப்புக்கு ஏற்ற வேலை இல்லைஎன்றோ.. அல்லதுஇந்த வேலை எனக்கு தெரியாதுஅந்த வேலை எனக்கு  ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டு வேலைக்கு செல்லாமல் இருப்பதை பார்க்கமுடிகிறதுஅவ்வாறு 6 மாதத்திற்கு மேல் ஒருவர் பணிக்கு செல்லாமல் இருந்தால் அவர் வேலையற்றவராக கருதப்படுகிறார்.
ஒரு புதிய கருத்துக் கணிப்பின்படிவேலையில்லாதவர்களில் 51 சதவீதத்தினர் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து எந்த நேர்காணலிலும் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளதுவேலைவாய்ப்பின்மையை சமாளிக்கவும் வேலை தேடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் நான்குசிறந்த வழிகள்:-
சுய உதவி பெறலாம்
நீண்ட காலம் வேலை இல்லாமல் இருப்பது உங்கள் சுய மரியாதையை பாதிப்பதோடு அது தன்நம்பிக்கை  குறைக்கும்மன அழுத்தத்தைஏற்படுத்தும்எனவே சிறந்த ஆலோசனைகள் பெறுவதோடுஉள்ளூர் நூலகம்கல்லூரி அல்லது தேவாலயம் போன்றவற்றில் தொடர்பினைஏற்படுத்திக் கொள்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை நீங்கள் பெறக்கூடும்.
வேலைக்கான உதவியை பெறுங்கள்
தற்போதைய தேடல் வெற்றியடையவில்லை என்றால் புதிய வாய்ப்புகளுக்கு பொறுத்தமான உங்கள் விண்ணப்பத்தை மாற்றிக் கொள்ளலாம்உள்ளூர் கல்லூரிகளில் மற்றும் வர்த்தக மையங்களில் கொடுக்கப்படும் இலவசப் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ளலாம்உங்கள்விருப்பத்துக்கு ஏற்ற துறை சார்ந்த நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் திறமை மற்றும் தகுதி குறித்து அறிந்து கொள்ளவேண்டும்பின்னர் அந்த திறன்களையும் அந்த அனுபவத்தையும் எப்படிப் பெறுவது என்பதைக் கண்டுபிடிக்கவும்வேலைவாய்ப்பைப் பெறுவதற்குஉங்களுக்குத் தேவையான திறன்கள் மற்றும் அனுபவங்களைத் ஏற்படுத்திக் கொள்வதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பிற வேலைவாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுங்கள்
உங்கள் முந்தைய வேலையின் ஊதியத்தை விட குறைந்த ஊதியத்தில் ஒரு வேலையை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மைஇருக்கலாம்எனினும் பகுதி நேர வேலை மற்றும் சில ஒப்பந்த பணிகளைச் செய்வதால் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் உங்கள் தொலைபேசிகட்டணம்புதிய வேலையின்  நேர்முகத்திற்கான செலவுகளை சமாளிக்க முடியும்.
மாணவர்கள் மட்டுமல்ல வேலைக்கு முயற்சிக்கும் யாராக இருந்தாலும் பயற்சி பணிக்கும் கூட விண்ணப்பிக்கலாம்ஊதியம் என்பது பெரியஅளவில் இல்லை என்றாலும் இதன் மூலம் நீங்கள் பெறும் அனுபவங்களும் தொடர்புகளும் உங்கள் நேரத்தை மதிப்பு மிக்கதாக மாற்றும்ஏதேனும்ஒரு நிறுவனத்தின் மீது உங்களுக்கு ஆர்வமோஅல்லது பெரும்மதிப்போ இருக்குமானால் அந்த நிறுவனத்தில் கடைநிலை பணியானாலும் ஏற்றுக்கொண்டு நிறுவனத்தோடு உங்களை இணைத்துக்கொள்வது நல்லதுபின்னர் உங்கள் திறமையை நேர்மையை பயன்படுத்தி அந்நிறுவனத்தில் உயர்பதவியை அடையும் வாய்ப்பை உருவாக்காலம்.
தன்னார்வ பணிகளை கூட கவனிக்க தவற வேண்டாம்சில நிறுவன முதலாளிகள் தன்னார்வ பணிகளில் உங்கள் திறமையை பார்த்துக்கூடஉங்களுக்கான பணிவாய்ப்பை வழங்ககூடும்.
வேலைவாய்ப்பு சந்தைக்கு தேவையான திறனை வளர்த்தல்
மீண்டும் பள்ளி - கல்லூரிக்குச் சென்று வேலைக்கு ஏற்ற படிப்பை படித்து வந்து நாம் விரும்பும் வேலையை அமைத்துக் கொள்வது என்பதுசாத்தியமில்லைஆனால்  வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்றவாறு உள்ள தகுதியைதனித்திறனை வளர்த்துக் கொள்வது சாத்தியமானது. நேர்காணலின் போது உங்களுக்கு அதிக நம்பிக்கைதைரியம்  தேவைப்படலாம் அல்லது ஒரு நிர்வாக உதவியாளராக சிறந்த தொழில்நுட்பதிறன்கள் தேவைப்படலாம்இணையதளம் மற்றும் உள்ளூர் பயிற்சி மையங்கள் இதற்கான வகுப்புகள் நடத்துகின்றன.  அதன்மூலம் திறனைவளர்த்துக் கொண்டு தகுந்த வேலையை அமைத்துக் கொள்ளுங்கள்.
வேலை என்பது ஊதியத்துக்கானது மட்டுமல்லநம்மை நமக்கும் பிறருக்கும் அடையாளப்படுத்தும் ஆற்றல்உரிய வேலையை பெறுவோம்... உயர்வே லட்சியம் என்று கொள்வோம்...!
இளைஞர் மணியில் வெளியான கட்டுரை

0 Comments: