இந்திய இலக்கிய சிற்பிகள் - பெரியாழ்வார்

இந்திய இலக்கிய சிற்பிகள் - பெரியாழ்வார் - ம.பெ. சீனிவாசன்; பக்.128 - சாகித்திய அகாதெமி இரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை,புதுதில்லி. 4ம் பதிப்பு

தமிழ் மொழிக்கு செய்திருக்க கூடிய மிகப்பெரிய தொண்டுகளில் பக்தி இலக்கியத்தின் பங்கும் அளப்பரியது.

தமிழ் மொழியில் தோன்றியது போல் வேறு எந்த மொழியிலும் இவ்வளவு அதிகமான பக்தி இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. 

பக்தி இலக்கியத்தின் தொடக்கம் சங்க காலத்திலேயே அறியப்பட்டாலும் ஆழ்வார், நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி குறிப்பிடத்தகுந்தாக இருக்கிறது. 

அதிலும் பன்னிரு அழ்வார்களான பொய்கை ஆழ்வார் , பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரின் படைப்புகள் திருமாலின் பெருமையை பாடிச் செல்வதால் ஆழ்வார்களை மால் உகந்த ஆசிரியர் என்று அழைப்பர்.

அவர்களுள் பெரியாழ்வாரின் படைப்புகளையும் அதன் தனிச் சிறப்புகளையும் பற்றிப் பேசுவதுதான் இந்நூல். அறிமுகம் , வாழ்க்கையும் படைப்பும், திருபல்லாண்டு, பெரியழ்வார் திருமொழி, கிருஷ்ணநுபவம், இலக்கியத் திறன், தத்துவ கருத்துகள், என ஏழு தலைப்புகளில் அலசி ஆராய்ந்துபதிவுசெய்திருக்கிறார் நூல் ஆசிரியர். பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் இல்லை என்பதை அவர் பாசுரங்களை விளக்கிச் சொல்வதன் மூலம் ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார். 

சமய தத்துவத்தையும், பக்தி நெறியையும் தம் இறை அனுபவத்தோடு கலந்து சொல்லும் பெரியாழ்வாரின் பாசுரங்கள் பக்தர்களிடம் மட்டுமல்லாமல், இலக்கிய அன்பர்கள் மனதிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பதையும் நூலாசிரியர் குறிப்பிட மறக்கவில்லை.

- தினமணி நாளிதழில் வெளியானது

0 Comments: